பேரங்கியூரில் இருந்து இன்று காலை என்னைத் தொடர்பு கொண்ட, நண்பர் ராஜா அவர்கள், “ஐயா, எங்க ஊரில் சனி மூலையில், பொற்கலையுடன் காட்சிதரும் பழமையான ஐயனார் இருக்கிறார். வந்துப் பாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார்.
“பேரங்கியூர் உங்க ஊர் மட்டுமல்ல; எங்க ஊரும் கூடத்தான். என் அம்மா பிறந்து வளர்ந்த ஊராயிற்றே. இன்றே வருகிறேன்” என்று அவருக்குப் பதில் அளித்தேன்.
உடனடியாக திருவாமாத்தூரில் இருந்து நண்பர் சரவணகுமார் விழுப்புரம் வர, மாலை 4 மணிக்கு பேரங்கியூர் புறப்பட்டோம்.
பேரங்கியூரில் தேரடிக்கு அருகில், திறந்த வெளியில், சிறிய சிறிய யானைகள் புடைசூழ பலகைக் கல்லில் வீற்றிருக்கிறார் ஐயனார்.
பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எதிர் வீட்டில் இருந்து வந்த அந்த அம்மையார் என்னைச் சரியாக அடையாளம் கண்டார். “வாத்தியார் வீட்டுப் பேரன்” என்றார். (என் தாத்தா வீரபத்திர படையாட்சி ஆசிரியர் ஆவார்)
எனக்கு ஆச்சரியம் தான். “அதான் ஜாடை தெரியுதுங்களே” என்றார் சிரித்துக் கொண்டே!
ஐயனார் மீது ஏகப்பட்ட எண்ணெய் பூச்சு. குடத்தில் தண்ணீர் எடுத்து வந்த அம்மையார் சிற்பத்தின் மீது ஊற்றினார். சரவணக்குமாரும் ஓரளவு அழுத்தித் துடைத்தார்.
ஐயனார் தனித்த உருவமாகப் பார்த்து இருக்கிறோம்.
அப்புறம், பூரணி பொற்கலை சமேதராய் பார்த்து வருகிறோம்.
ஆனால், பேரங்கியூரில் இணையர் ஒருவரோடு இருக்கிறார், ஐயனார்!
ஒரு காலை தொங்கவிட்டும் மற்றொரு காலை மடக்கியும் அமர்ந்து இருக்கிறார்.
வலது கையில் ஏதோ ஏந்தி இருக்கிறார்.
தலைமுடி மகுடம் போல் இருக்கிறது. (பல்லவர் பாணியாக இருக்கலாமோ?)
அருகில் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு, ஆனால் ஒருகால் தெரியாத அளவிற்கு நளினமாக அமர்ந்து இருக்கிறார், இணையர்.
பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக காட்சிதரும் இந்த ஐயனார் ஆச்சரியம் ஊட்டுபவராகவே இருக்கிறார்.
இதற்கிடையில் வெளியூரில் இருக்கும் அவ்வூர் நண்பர்கள் ராஜா மற்றும் கலியபெருமாள் ஆகியோர் அடிக்கடி என்னைத் தொடர்பு கொண்டு வேறு ஏதேனும் உதவி வேண்டுமா? எனக் கேட்டபடி இருந்தனர்.
அவர்தம் கரிசனத்திற்கு நன்றி!
தக்க சமயத்தில் நம்மை இங்கு அழைத்து வந்த நண்பர் சரவணக்குமாருக்கும் நம் நன்றிகள்!
ஐயனாருக்குக் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் எப்படியாவது கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என்கிறார் ராஜா.
இவர்களுக்கு நம் வாழ்த்துகள்!
பேரங்கியூரில் பல்லவர் கால மூத்த தேவி ஏற்கனவே கண்டறியப்பட்டு இருக்கிறார். பராந்தகச் சோழனின் திருமூலத்தானத்து தேவர் கோயில் கொண்டு இருக்கிறார்.
வரலாற்றை அசை போட்டுக்கொண்டு இருக்கும் போது அம்மையார் அவர்கள் சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்தார்.
ஏறக்குறைய, 19 வருடங்கள் கழித்து பேரங்கியூர் காபி குடிக்கிறேன்.
காபியுடன் இந்தக் கிராமத்தின் வரலாறும் எனக்குள் கலந்தது..!
“பேரங்கியூர் உங்க ஊர் மட்டுமல்ல; எங்க ஊரும் கூடத்தான். என் அம்மா பிறந்து வளர்ந்த ஊராயிற்றே. இன்றே வருகிறேன்” என்று அவருக்குப் பதில் அளித்தேன்.
உடனடியாக திருவாமாத்தூரில் இருந்து நண்பர் சரவணகுமார் விழுப்புரம் வர, மாலை 4 மணிக்கு பேரங்கியூர் புறப்பட்டோம்.
பேரங்கியூரில் தேரடிக்கு அருகில், திறந்த வெளியில், சிறிய சிறிய யானைகள் புடைசூழ பலகைக் கல்லில் வீற்றிருக்கிறார் ஐயனார்.
பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எதிர் வீட்டில் இருந்து வந்த அந்த அம்மையார் என்னைச் சரியாக அடையாளம் கண்டார். “வாத்தியார் வீட்டுப் பேரன்” என்றார். (என் தாத்தா வீரபத்திர படையாட்சி ஆசிரியர் ஆவார்)
எனக்கு ஆச்சரியம் தான். “அதான் ஜாடை தெரியுதுங்களே” என்றார் சிரித்துக் கொண்டே!
ஐயனார் மீது ஏகப்பட்ட எண்ணெய் பூச்சு. குடத்தில் தண்ணீர் எடுத்து வந்த அம்மையார் சிற்பத்தின் மீது ஊற்றினார். சரவணக்குமாரும் ஓரளவு அழுத்தித் துடைத்தார்.
ஐயனார் தனித்த உருவமாகப் பார்த்து இருக்கிறோம்.
அப்புறம், பூரணி பொற்கலை சமேதராய் பார்த்து வருகிறோம்.
ஆனால், பேரங்கியூரில் இணையர் ஒருவரோடு இருக்கிறார், ஐயனார்!
ஒரு காலை தொங்கவிட்டும் மற்றொரு காலை மடக்கியும் அமர்ந்து இருக்கிறார்.
வலது கையில் ஏதோ ஏந்தி இருக்கிறார்.
தலைமுடி மகுடம் போல் இருக்கிறது. (பல்லவர் பாணியாக இருக்கலாமோ?)
அருகில் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு, ஆனால் ஒருகால் தெரியாத அளவிற்கு நளினமாக அமர்ந்து இருக்கிறார், இணையர்.
பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக காட்சிதரும் இந்த ஐயனார் ஆச்சரியம் ஊட்டுபவராகவே இருக்கிறார்.
இதற்கிடையில் வெளியூரில் இருக்கும் அவ்வூர் நண்பர்கள் ராஜா மற்றும் கலியபெருமாள் ஆகியோர் அடிக்கடி என்னைத் தொடர்பு கொண்டு வேறு ஏதேனும் உதவி வேண்டுமா? எனக் கேட்டபடி இருந்தனர்.
அவர்தம் கரிசனத்திற்கு நன்றி!
தக்க சமயத்தில் நம்மை இங்கு அழைத்து வந்த நண்பர் சரவணக்குமாருக்கும் நம் நன்றிகள்!
ஐயனாருக்குக் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் எப்படியாவது கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என்கிறார் ராஜா.
இவர்களுக்கு நம் வாழ்த்துகள்!
பேரங்கியூரில் பல்லவர் கால மூத்த தேவி ஏற்கனவே கண்டறியப்பட்டு இருக்கிறார். பராந்தகச் சோழனின் திருமூலத்தானத்து தேவர் கோயில் கொண்டு இருக்கிறார்.
வரலாற்றை அசை போட்டுக்கொண்டு இருக்கும் போது அம்மையார் அவர்கள் சுடச்சுட காபி கொண்டு வந்து கொடுத்தார்.
ஏறக்குறைய, 19 வருடங்கள் கழித்து பேரங்கியூர் காபி குடிக்கிறேன்.
காபியுடன் இந்தக் கிராமத்தின் வரலாறும் எனக்குள் கலந்தது..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக