விழுப்புரம் அருகே உள்ள திரு
ஆமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், நண்பர் சரவணகுமார். வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
“சார் எங்க ஊருக்கு வாங்க” நேற்று முன்தினம் சரவணக் குமாரிடம் இருந்து அன்பு அழைப்பு.
இன்று (புதன்) நேரம் கிடைத்தது. விழுப்புரம் வந்த அவருடன் ஆமாத்தூர் பயணமானேன்.
ஆமாத்தூர் – எடப்பாளையம் எல்லையில் வண்டியை விட்டு இறங்கி, பம்பை ஆற்றில் நடக்கத் தொடங்கினோம்.
இரட்டைப் புலவர்களால் பாடப்பட்டப் பம்பை, ஒரே இரவில் தடம் மாறிய பம்பை..!
அடியெடுத்து வைத்ததும் இனம் புரியாத உணர்வு எனக்குள்!
எடப்பாளையம் – திருவாமாத்தூர் இடைப்பட்ட பகுதியில் தான் இப்படியான அகண்ட பம்பை ஆற்றைப் பார்க்க முடியும். மற்ற இடங்களில் எல்லாம் குறுகிய கால்வாயாகத் தெரியும்” – விளக்கிக் கொண்டு வந்தார், சரவணக்குமார்.
கொஞ்சம் தூரம் நடந்திருப்போம். “இதோ இங்கதான் சார்” சுட்டிக்காட்டினார்.
ஆற்றில் மண் எடுத்ததால் பிரம்மாண்ட பள்ளம்.
ஒரு பக்கம், மண்ணை அணைத்தபடி காட்சி அளிக்கிறது இந்தச் சுவடு.
மிகவும் கனமான, ஓடுகளால் வட்டமாக புதைந்து கிடக்கிறது.
“உறைகிணறு ஆக இருக்கலாம்..?” ஒருவாறு யூகிக்க முடிகிறது.
பொக்லைன் வைத்துத் தோண்டும் போது, எப்படியோ ஓரளவுக்கு தப்பிப் பிழைத்து இருக்கிறது.
மேலும் சிதைத்து விடாதவாறு நண்பர் சரவணகுமார் பாதுகாத்து வருகிறார்.
மகிழ்ச்சி. நண்பருக்கு நம் வாழ்த்துகள்.
மண்ணுக்குள் இருந்து இப்போது தான் வெளிப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை!
இது உறைகிணறு தானா? ஆம் எனில், இதன் காலம் என்னவாக இருக்கலாம்?
இதுபற்றி எல்லாம், அறிந்த நண்பர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்..!
இதுபற்றி, தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையர் அவர்களுக்கும் இன்று மாலை மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.
ஆமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், நண்பர் சரவணகுமார். வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
“சார் எங்க ஊருக்கு வாங்க” நேற்று முன்தினம் சரவணக் குமாரிடம் இருந்து அன்பு அழைப்பு.
இன்று (புதன்) நேரம் கிடைத்தது. விழுப்புரம் வந்த அவருடன் ஆமாத்தூர் பயணமானேன்.
ஆமாத்தூர் – எடப்பாளையம் எல்லையில் வண்டியை விட்டு இறங்கி, பம்பை ஆற்றில் நடக்கத் தொடங்கினோம்.
இரட்டைப் புலவர்களால் பாடப்பட்டப் பம்பை, ஒரே இரவில் தடம் மாறிய பம்பை..!
அடியெடுத்து வைத்ததும் இனம் புரியாத உணர்வு எனக்குள்!
எடப்பாளையம் – திருவாமாத்தூர் இடைப்பட்ட பகுதியில் தான் இப்படியான அகண்ட பம்பை ஆற்றைப் பார்க்க முடியும். மற்ற இடங்களில் எல்லாம் குறுகிய கால்வாயாகத் தெரியும்” – விளக்கிக் கொண்டு வந்தார், சரவணக்குமார்.
கொஞ்சம் தூரம் நடந்திருப்போம். “இதோ இங்கதான் சார்” சுட்டிக்காட்டினார்.
ஆற்றில் மண் எடுத்ததால் பிரம்மாண்ட பள்ளம்.
ஒரு பக்கம், மண்ணை அணைத்தபடி காட்சி அளிக்கிறது இந்தச் சுவடு.
மிகவும் கனமான, ஓடுகளால் வட்டமாக புதைந்து கிடக்கிறது.
“உறைகிணறு ஆக இருக்கலாம்..?” ஒருவாறு யூகிக்க முடிகிறது.
பொக்லைன் வைத்துத் தோண்டும் போது, எப்படியோ ஓரளவுக்கு தப்பிப் பிழைத்து இருக்கிறது.
மேலும் சிதைத்து விடாதவாறு நண்பர் சரவணகுமார் பாதுகாத்து வருகிறார்.
மகிழ்ச்சி. நண்பருக்கு நம் வாழ்த்துகள்.
மண்ணுக்குள் இருந்து இப்போது தான் வெளிப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை!
இது உறைகிணறு தானா? ஆம் எனில், இதன் காலம் என்னவாக இருக்கலாம்?
இதுபற்றி எல்லாம், அறிந்த நண்பர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்..!
இதுபற்றி, தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையர் அவர்களுக்கும் இன்று மாலை மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக