செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

திருவக்கரை கல் மரம்

இது வரலாற்றுச் சோகம் தான்..!


மரமே
நீ கல்லானது
சாபமாக இருக்கலாம்!

ஆனால்
அறிவியலுக்குக் கிடைத்திட்ட
வரம்!

அட...
"வக்கரை"யில் மட்டுமா?

இதோ இக்கரையிலும்
இருக்கிறாயே!

ஆமாம்.
கனிமக் களவாணிகளுக்குத்
தெரியுமா
கல் எது? கல் மரம் எது?
என்று.

கருங்கற்களும்
முட்களும்
அப்படி என்னதான் பேசுகின்றன
உன் காதோடு?

இன்னும்
யார் கரங்கள் பட
காத்திருக்கிறாய்
இந்த இடத்தில்?

(இதுபற்றிய விரிவான விவரங்கள் விரைவில்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக